முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
திருவட்டாறு அருகே ரப்பர் ஷீட்டுகள் திருட்டு
By DIN | Published On : 04th August 2019 01:00 AM | Last Updated : 04th August 2019 01:00 AM | அ+அ அ- |

திருவட்டாறு அருகே ரப்பர் கடையில் நள்ளிரவில் புகுந்து ரப்பர் ஷீட்டுகள், பணம் திருடியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
புலியிறங்கி பகுதியைச் சேர்ந்தவர் டைட்டஸ் (61). இவர், அப்பகுதியில் ரப்பர் கடை நடத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை வழக்கம் போல் கடையை டைட்டஸ் மூடிச் சென்றாராம். சனிக்கிழமை வந்து பார்த்தபோது, கடையில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். கடைக்குள் சென்று பார்த்த போது கடையில் வைத்திருந்த 80 கிலோ ரப்பர் ஷீட்டுகள், ரொக்கம் ரூ. 15 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
புகாரின்பேரில், திருவட்டாறு போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.