குமரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது.
குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாள்களாக மிதமான சாரல் மழையுடன் கார்மேகங்கள் சூழ்ந்த வானிலை காணப்படுகிறது. இந்நிலையில் திற்பரப்பு அருவியிலும் மிதமான அளவில் தண்ணீர் கொட்டுகிறது. ஞாயிற்றுக்கிழமை இங்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். இவர்கள் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் "செல்பி' எடுத்து மகிழ்ந்தனர்.