தக்கலை அருகே அனுமதியின்றி பாறைகளை உடைத்து கடத்தியவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தக்கலை அருகே கனிக்குடி விளையில் பட்டா நிலத்தில் அனுமதியின்றி பாறைகளை உடைத்து கடத்துவதாக வருவாய்த் துறையினருக்கு புகார் வந்தது.
இதையடுத்து மருத்தூர்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சுந்தர்ராஜ் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு பாறைகள் உடைக்கப்பட்டிருந்ததும், பள்ளியாடி பிலாவறவிளையைச் சேர்ந்த ஜெரால்டு பெஞ்சமின் (51) இந்த செயலில் ஈடுபட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில் தக்கலை போலீஸார் ஜெரால்டு பெஞ்சமின் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.