6 வட்டங்களில் ஆக.16இல் அம்மா திட்ட சிறப்பு முகாம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வட்டங்களில்  அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.16)   நடைபெறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 வட்டங்களில்  அம்மா திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.16)   நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் அம்மா திட்டத்தின் 5 ஆம் கட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக. 16) காலை 10 மணிக்கு நடைபெறும். அதன்படி, அகஸ்தீசுவரம் வட்டத்தில் வடிவீஸ்வரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், தோவாளை வட்டத்தில் இறச்சகுளம் அரசு தொடக்கப் பள்ளியிலும்,  கல்குளம் வட்டத்தில்,  தக்கலை வருவாய் கிராமத்துக்கு விலவூர் தாணிவிளை அரசு தொடக்கப் பள்ளியிலும்,  திருவட்டாறு வட்டத்தில் அயக்கோடு வருவாய் கிராமத்துக்கு அண்டூர் அரசு நடுநிலைப் பள்ளியிலும், விளவங்கோடு வட்டத்தில் உண்ணாமலைக்கடை வருவாய் கிராமத்துக்கு காஞ்சிரங்கோடு, அரசு உயர்நிலைப் பள்ளியிலும்,  கிள்ளியூர் வட்டத்தில் முன்சிறை வருவாய் கிராமத்துக்கு, பார்த்திபபுரம் அரசு நடுநிலைப் பள்ளியிலும் முகாம்கள்  நடைபெறும்.
இதில் மக்கள் பங்கேற்று, இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல், உழவர் பாதுகாப்பு அட்டை, பிறப்பு- இறப்பு சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வருவாய் வட்டாட்சியர் அதிகாரத்திற்குள்பட்ட நில பிரச்னைகள், குடிநீர்- சாலை வசதி போன்ற பொதுவான மனுக்களை அளித்து தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com