குமரி மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் கொட்டாரம் குமரி அத்லெடிக் அகாதெமியைச் சேர்ந்த 15 வீரர்கள் சிறப்பிடம் பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா கொட்டாரத்தில் நடைபெற்றது.
இதில், அகாதெமி தலைவர் சிவபண்டாரம், துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலர் துரைசிங், பயிற்சியாளர் அரிகோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினர்.