வெள்ளிமலை பேரூராட்சியில் ஆக. 22இல் முன்னோடி மனுநீதி நாள் முகாம்

குமரி மாவட்டம், வெள்ளிமலை பேரூராட்சியில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (ஆக.22)  நடைபெற உள்ளது.

குமரி மாவட்டம், வெள்ளிமலை பேரூராட்சியில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை (ஆக.22)  நடைபெற உள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கல்குளம் வட்டம், வெள்ளிமலை வருவாய் கிராமத்தில் நடைபெற உள்ள, மாவட்ட வருவாய் அலுவலரின் சிறப்பு மனுநீதித் திட்ட முகாமுக்கு மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முதல் கட்ட முன்னோடி மனுநீதி நாள் முகாம் உரப்பனவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை (ஆக. 22) காலை 10  மணி முதல் பிற்பகல் 1 மணிவரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களிடமிருந்து கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியரால் மனுக்கள் பெறப்பட்டு தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.    எனவே, வெள்ளிமலை பேரூராட்சி  மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com