குறுவட்ட அளவிலான இறகுப் பந்து போட்டியில் வாறுதட்டு மார் மத்தேயு காவுக்காட் நினைவு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் வெற்றிபெற்றனர்.
குறுவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டிகள் அண்மையில் வாவறை புனித பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உள்பட்ட மாணவியருக்கான ஒற்றையர் இறகுப் பந்து போட்டியில் இப் பள்ளி மாணவி அபர்ணா முதலிடம் பிடித்தார். மாணவர் சஞ்சு இரண்டாமிடம் பிடித்தார். இரட்டையர் இறகுப்பந்து போட்டியில் மாணவியர் அபர்ணா, டால்மியா மேரி ஆகியோரைக் கொண்ட அணி முதலிடம் பெற்றது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை தலைமையாசிரியர் சத்தியதாஸ், உடற்கல்வி ஆசிரியர் என்.எம். பிரேம்ராஜ் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வாழ்த்தினர்.