நித்திரவிளை அருகே ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் திருட்டு

நித்திரவிளை அருகே நியாயவிலைக் கடையில்  200 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.

நித்திரவிளை அருகே நியாயவிலைக் கடையில்  200 லிட்டர் ரேஷன் மண்ணெண்ணெயை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
நித்திரவிளை அருகே மாம்பழஞ்சி பகுதியில் நியாயவிலைக் கடை செயல்பட்டு வருகிறது. இக் கடையின் விற்பனையாளராக பால்ராஜ் வேலை பார்த்து வருகிறார். இவர் வியாழக்கிழமை மாலையில் 3 பேரல்களில் 500 லிட்டர் மண்ணெண்ணெயை வழக்கம் போல் கடையின் வெளிப்பகுதியில் வைத்துவிட்டு, கடையை பூட்டிச் சென்றுவிட்டாராம். வெள்ளிக்கிழமை காலையில் கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் முன்பு  இருந்த 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு  மண்ணெண்ணெய் பேரல் திருடு போனது தெரியவந்ததாம்.
இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆலம்பாடி கோயிலில்...
கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி குழித்துறை அருகேயுள்ள ஆலம்பாடி  ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கோயிலில் இருந்து சமய வகுப்பு மாணவர்களின் ஊர்வலம் நடைபெற்றது.
 இந்த  பவனி கோட்டவிளை, கழுவன்திட்டை, மருதங்கோடு, சூழிக்கோணம் வழியாக கோயிலை வந்தடைந்தது. இந்த பவனியில் சமய வகுப்பு மாணவ, மாணவியர் கிருஷ்ணர், ராதை, முருகன் உள்ளிட்ட பல்வேறு இந்து கடவுள்கள் வேடமணிந்து  பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com