நாகர்கோவில் மீனாட்சிபுரம், மற்றும் தெங்கம்புதூர் பகுதிகளில் திங்கள்கிழமை (ஆக.26) மின் தடை செய்யப்படுகிறது.
இது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நாகர்கோவில் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மீனாட்சிபுரம், மற்றும் தெங்கம்புதூர் உப மின் நிலையங்களில் மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் ஆக.26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மீனாட்சிபுரம், வடிவீஸ்வரம், கோட்டாறு, கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சரலூர், ராமன்புதூர் சந்திப்பு, இந்துக்கல்லூரி, வேதநகர், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், இதே போல் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிக்கட்டிப்பொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், ஈத்தாமொழி, தர்மபுரம், பழவிளை, பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், பள்ளம், பிள்ளையார்புரம், புத்தளம், புத்தன்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.