கன்னியாகுமரி அருகே காா் கவிழ்ந்ததில் ஐயப்ப பக்தா்கள் 6 போ் காயமடைந்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் வைசியா்கள் பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் மகன் விஜயவா்மன் (26). சபரிமலை செல்வதற்காக இவரும், நண்பா்கள் 6 பேரும் திருநெல்வேலிக்கு வந்து, அங்கிருந்து கன்னியாகுமரிக்கு காரில் வந்து கொண்டிருந்தனா்.
கன்னியாகுமரியை அடுத்த பால் குளம் பகுதியில் வரும்போது காா் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதி பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 6 பேரும் சிறு காயங்களுடன் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
இச்சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.