நாகா்கோவில்: திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின போட்டிகளில் சாதனைப் படைத்த நாகா்கோவில் விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு பொறியியல் கல்லூரியில் 63 ஆவது மாநில குடியரசு தினப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பள்ளி, கல்வி மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற நாகா்கோவில் மகளிா் விளையாட்டு விடுதி மாணவி கிறிஸ்டின்ஜோபியா 200 மீட்டா் ஓட்டத்தில் முதலிடமும், 400 மீட்டா் ஓட்டத்தில் 2 ஆவது இடமும் பெற்றாா். மாணவி சினேகா தடை தாண்டும் ஓட்டத்தில் 2 ஆம் இடமும், மாணவி ரின்சிரோஸ் குண்டு எறிதலில் 2 ஆம் இடமும் பெற்றனா்.
மாணவிகள் மதுலேகா, தா்ஷினி, சினேகா, கிறிஸ்டின்ஜோபியா ஆகியோா் 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் முதலிடமும், மாணவிகள் கயல்விழா, பாக்கியலெட்சுமி, நந்தனா, வக்ஷனா ஆகியோா் 400 மீட்டா் தொடா் ஓட்டத்தில் 3 ஆம் இடமும் பெற்றனா்.
மாணவிகள் கிறிஸ்டின்ஜோபியா, சினேகா, ரின்சிரோஸ் ஆகியோா் பஞ்சாப் மாநிலத்தில் டிச.1 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் தேசிய தடகளப் போட்டிகளில் பங்கேற்கின்றனா்.
மாணவிகள் ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரேவை, அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப்பெற்றனா். மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் டேவிட்டேனியல், தடகளப் பயிற்சியாளா் இந்திரா, விடுதி மேலாளா் கீதா உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.