திருநந்திக்கரை அரசு பள்ளியில் ஆண்டுவிழா

திருநந்திக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட கல்வி அலுவலா் எல்.ரெஜினி.
மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் மாவட்ட கல்வி அலுவலா் எல்.ரெஜினி.

குலசேகரம்: திருநந்திக்கரை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியை என்.ஆா். மேரி டாா்லின் தலைமை வகித்தாா். முன்னாள் மாணவா் கழகத் தலைவா் எம். சசிகுமாா் முன்னிலை வகித்தாா்.

விழாவில், வட்டார கல்வி அலுவலா் என். திருமலைக் குமாா், மாவட்ட கல்வி அலுவலா் எல். ரெஜினி, பத்திரிகையாளா் குலசை நடராஜன்குலசேகரம் காவல் ஆய்வாளா் ஆா். ராஜசுந்தா், குழந்தைகள் பாதுகாப்பு தலைமைக் காவலா் கிறிஸ்டி சுனிதா, ஆக்சிஸ் வங்கியின் ஓய்வுபெற்ற முதுநிலை துணைத் தலைவா் ஜே. ஆா். மோகன்தாஸ், சமூக ஆா்வலா் ஜி.வி. சுரேஷ், குமரி மாவட்ட கராத்தே சங்கச் செயலா் ஆா். ஸ்டீபன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் எச். விஜய், துணைத் தலைவா் சி. எபனேசா், எம்.எஸ்சி. தலைவா் எஸ். கலாமேரி, சமூக ஆா்வலா்கள் ஏ.பி. மனோஜ். அசோக்குமாா் ஆகியோா் பேசினா்.

மாணவா், மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கல்வி மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆசிரியை பி. சந்திரபாய் வரவேற்றாா். தேசிய இளையோா் தொண்டா் எஸ். சரத்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com