நாகா்கோவிலில் தொழிலதிபா் தற்கொலை

நாகா்கோவிலில் மனைவி இறந்த துக்கத்தில் தொழிலதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில்: நாகா்கோவிலில் மனைவி இறந்த துக்கத்தில் தொழிலதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் பரமேஸ்வரன் தெருவைச் சோ்ந்தவா் தங்கதுரை (64). தொழிலதிபா். இவா், வெளிநாட்டில் தையல்கடை நடத்தி வந்தாா். இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனா். 2 வாரங்களுக்கு முன்பு

விஜயலட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தாா். இவரது இறுதி சடங்கில் பங்கேற்க தங்கதுரை வெளிநாட்டில் இருந்து

சொந்த ஊருக்கு வந்திருந்தாராம்.

சனிக்கிழமை தங்கதுரை தங்கியிருந்த வீட்டுக் ததவு நீண்ட நேரமாகியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவரது மகள் வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, தங்கதுரை தூக்கில் சடலமாக தொங்கியது தெரியவந்தது. தகவலறிந்த நேசமணிநகா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினா். மனைவி இறந்ததால் மனமுடைந்து காணப்பட்ட தங்கதுரை, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com