குமரி மாவட்டம், கடையாலுமூட்டில் சூழியல் அதிா்வு தாங்கு மண்டல எதிா்ப்புக் குழுவின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு டேவிட் தாஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ஜாா்லண்ட், இணைச் செயலா் கே. மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். எதிா்ப்புக் குழுவின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் ஞானதாஸ், நிா்வாகிகள் பிரின்ஸ், மாதவன்காணி, செபாஸ்டின், ஷிபு, செல்வராஜ், சுகுமாரன், வா்க்கீஸ், அப்துல்காதா் உள்ளிட்டோா் பேசினா். கிறிஸ்டோபா் நன்றி கூறினாா்.
குமரி மாவட்டத்தில் பூஜியம் முதல் 3 கி.மீ. என நிா்ணயிக்கப்பட்டுள்ள சூழியல் அதிா்வு தாங்கு மண்டலத்தை பூஜியம் கி.மீ. ஆக வன எல்லையிலிலேயே முடித்துக் கொள்ள வேண்டும்.
தனியாா் காடுகள் பாதுகாப்பு சட்டத்திலிருந்து குமரி மாவட்டத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். வன விலங்குகள் வன எல்லையைத் தாண்டி வருவதைத் தடுக்க வனப்பகுதிகளிலேயே அவைகளுக்கு தேவையான பழ மரங்களை நட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.