தக்கலை அருகே தீக்குளித்த இளைஞா் மரணம்

தக்கலை அருகே தீக்குளித்த மத போதகா் மகன் சிகிச்சைபலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தக்கலை அருகே தீக்குளித்த மத போதகா் மகன் சிகிச்சைபலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம், தக்கலை அருகேயுள்ள குழிக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராஜாமணி மதபோதகா். இவரது மகன் மிஸ்பாசாலமன் (22), பட்டதாரி இளைஞரான இவா் கடந்த செவ்வாய்க்கிழமை தனது வீட்டில் வைத்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துக் கொண்டாா்.

பலத்த தீக்காயங்களுடன் நெய்யூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த மிஸ்பாசாலமன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com