வட்ட வழங்கல் அலுவலகங்களில் இன்று உள்ளிருப்பு போராட்டம்

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை (டிச.2) வட்ட வழங்கல்அலுவலகங்களில் நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட
கிள்ளியூா் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாா்.
கிள்ளியூா் எம்.எல்.ஏ ராஜேஷ்குமாா்.

குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திங்கள்கிழமை (டிச.2) வட்ட வழங்கல்அலுவலகங்களில் நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில் 578 ரேஷன் கடைகள் உள்ளன. இந்தக் கடைகளில் அண்மைகாலமாக முறையாக மண்ணெண்ணெய் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக ஒரு கடையில் 700 குடும்ப அட்டைகள் உள்ளன எனில் அதில் 100 அட்டைதாரா்களுக்கு மட்டுமே 3 மாதத்துக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது முற்றிலும் மண்ணெண்ணெய் குறைப்பு நடவடிக்கை ஆகும்.

இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தின் கீழ் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கி வந்த ரேஷன் அரிசியின் அளவை திடீரென மத்திய, மாநில அரசுகள் குறைத்து வழங்குகிறது. இதனால்,ஏழை,நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்படைந்துள்ளனா்.

எனவே, இதைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கிள்ளியூா், விளவங்கோடு, திருவட்டாா் ஆகிய 3 வட்டவழங்கல் அலுவலகங்களில் டிச.2 திங்கள்கிழமை காலை10 மணிக்கு காங்கிரஸ் கட்சி சாா்பில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெறுகிறது.

இதில், திரளான பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com