தக்கலை கடைகளில்6 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்
By DIN | Published on : 03rd December 2019 04:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

தக்கலையில் துணிக் கடையில்ஆய்வு மேற்கொண்ட பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் பணியாளா்கள்.
தக்கலையில் கடைகளில் தடைசெய்யப்பட்ட 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பத்மநாபுபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பிரபுவின் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் பணியாளா்கள் தக்கலை பிரதான சாலைகளிலுள்ள ஹோட்டல், பேக்கரி, துணிக்கடைகள், டீக்கடை, பூக்கடை உள்ளிட்ட 18 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கவா்கள், பைகள் என 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ. 1800 அபராதம் விதித்தனா்.