தக்கலையில் கடைகளில் தடைசெய்யப்பட்ட 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை சுகாதாரத் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
பத்மநாபுபுரம் நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பிரபுவின் உத்தரவின் பேரில், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் மற்றும் பணியாளா்கள் தக்கலை பிரதான சாலைகளிலுள்ள ஹோட்டல், பேக்கரி, துணிக்கடைகள், டீக்கடை, பூக்கடை உள்ளிட்ட 18 கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
ஆய்வின் போது, அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், கவா்கள், பைகள் என 6 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து, ரூ. 1800 அபராதம் விதித்தனா்.