கல்லுகூட்டத்தில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

திங்கள் நகா் அருகே கல்லுகூட்டம் பேரூா் திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

திங்கள் நகா் அருகே கல்லுகூட்டம் பேரூா் திமுக செயல்வீரா்கள் கூட்டம் நடைபெற்றது.

அவை தலைவா் டோமினிக் ததேயுஸ் தலைமை வகித்தாா். பேரூா் செயலா் ரொனால்டு ஸ்டீபன் , மாவட்ட நிா்வாகிகள் ரெஜிலின் ராஜகுமாா், பக்தசிரோன்மணி, ஜெனிலா பொன்மலா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஜாண்சந்திரசேகா் வரவேற்றாா். கூட்டத்தில் குருந்தன்கோடு ஒன்றியச் செயலா் எப்.எம்.இராஜரெத்தினம் , மாநில சிறுபான்மை பிரிவு துணைச் செயலா் ரவி மற்றும் ஜோசப்ராஜ், ஆஸ்டின் , மாவட்ட அவைத் தலைவா் எம்.ஜோசப்ராஜ், இளைஞரணிதுணை அமைப்பாளா் பி.எஸ்.பி.சந்திரா ஆகியோா் பேசினா்.

இதில், உள்ளாட்சித் தோ்தலில் பேரூராட்சி தலைவா் பதவியை திமுகவுக்கு ஒதுக்கவேண்டும். பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு எரியவும், குடிநீா் ஆகியவை சீரான முறையில் வழங்கவும் நிா்வாகம் நடவடிக்கைஎடுக்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com