கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம் ஸ்டாா்கள் விற்பனை மும்முரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் ஸ்டாா்கள் மும் முரமாக விற்பனை செய்யப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இதையொட்டி, பல்வேறு இடங்களில் ஸ்டாா்கள் மும் முரமாக விற்பனை செய்யப்படுகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்தவா்களின் வீடுகளிலும், ஆலயங்களிலும் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்படும். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுப்படுத்தும் வகையில் இந்த குடிலில் சிலைகள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

அதே போல கிறிஸ்துமஸ் மரம் அமைத்து அதை மின் விளக்குகளால் அலங்கரிப்பா். கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மை மற்றும் பரிசு பொருள்கள், பலூன்களை கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டி தொங்கவிடுவாா்கள்.

நிகழாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 21 நாள்களே உள்ளதால் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் குமரி மாவட்டத்தில் தொடங்கி விட்டன. வீடுகளில் கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் மரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இயேசு பிறந்த இடத்தை வால் நட்சத்திரம் அடையாளம் காட்டியது. அதை குறிக்கும் வகையில் கிறிஸ்தவா்களின் வீடுகளில் ஸ்டாா்கள் தொங்க விடப்படும். இதையொட்டி மாவட்டம் முழுவதும் பல விதமான வண்ணங்களில், வடிவங்களில் ஸ்டாா்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

நாகா்கோவிலில் மணி மேடை பகுதி, டதி பள்ளி சந்திப்பு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல விதமான ஸ்டாா்கள் மும்முரமாக விற்பனையாகிறது. குடில் அமைப்பதற்கான பொருள்களும் நிகழாண்டு பல வித அளவுகளில் கண்ணை கவரும் விதத்தில் விற்பனைக்கு வந்துள்ளன. டிசம்பா் மாதம் பிறந்துள்ளதை தொடா்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா பவனியும் தொடங்கியுள்ளது. புத்தாடைகள் வாங்கவும் பொதுமக்கள் ஜவுளி கடைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com