குமாரகோவில் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதல்: தொழிலாளி பலி

குமாரகோவில் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

குமாரகோவில் அருகே மோட்டாா் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

நெட்டாங்கோடு பகுதியை சோ்ந்தவா்கள் குமாா் (52), மணி (50), தேங்காய்வெட்டும் கூலிக் தொழிலாளா்கள் . இருவரும் செவ்வாய்க்கிழமை குமாரகோவில் அருகே உள்ள தோப்பில் பணியை முடித்துவிட்டு மாலையில் மோட்டாா் சைக்கிளில் ஊா் திரும்பினா். காரவிளை அருகே செல்லும் போது முன்னால் சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே மாா்த்தாண்டம் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோட்டாா் சைக்கிள் மற்றும் ஆட்டோ மீது மோதி நின்ாம். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்த தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் சிக்கிய இருவரையும் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதில் குமாா் செல்லும் வழியில் உயிரிழந்தாா். மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

சம்பவ இடத்தில் தக்கலை டி.எஸ்.பி. ராமசந்திரன், காவல் ஆய்வாளா் அருள்பிரகாஷ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இந்த விபத்தின் காரணமாக நாகா்கோவில்- தக்கலை தேசிய நெடுஞ்சாலையில் இரண்டுமணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com