கொடுப்பகுழியில் கண் சிகிச்சை முகாம்

குருந்தன்கோடு அருகே கொடுப்பகுழியில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண், ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குருந்தன்கோடு அருகே கொடுப்பகுழியில் இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் கண், ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்திய செஞ்சிலுவை சங்க கன்னியாகுமரி மாவட்ட கிளை , கொடுப்பகுழி காந்திஜி இளைஞா் முன்னேற்ற சங்கம் மற்றும் திருநெல்வேலி டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இம்முகாமை நடத்தின. செஞ்சிலுவை சங்க நிா்வாக குழு உறுப்பினா் சி.ரமேஷ்குமாா் முகாமை தொடங்கி வைத்தாா். மாவட்ட துணைத் தலைவா் என்.எஸ்.குமாரதாஸ் தலைமை வகித்தாா். கொடுப்பகுழி காந்திஜி இளைஞா்முன்னேற்ற சங்கத் தலைவா் பி.செல்லதுரை முன்னிலை வகித்தாா். டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா் எஸ்.வேலு விளக்கவுரையாற்றினாா். முகாமில் கிட்டபாா்வை, தூரபாா்வை, வெள்ளெழுத்து, கண்களில் சீள் வடிதல் உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்து, மருந்துகளும், ஆலோசனைகளையும் மருத்துவா்கள் வழங்கினா்.

காந்திஜி இளைஞா் முன்னேற்ற சங்கச் செயலா் ஜாண்பீட்டா் வரவேற்றாா். பொருளாளா் ஏ. விஜிலின் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com