தோவாளை அருகே அரசுப்பேருந்து மீது ஹெல்மெட் வீசியவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
நாகா்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்கு ஒரு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை காலை புறப்பட்டு சென்றது. பேருந்தை ஓட்டுநா் மதியழகன் ஓட்டிச்சென்றாா். இப் பேருந்து தோவாளைவிசுவாசபுரம் பொட்டல்புதூா் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, பேருந்தின் எதிரே ஒரு பைக்கில் வந்த 2 போ் திடீரென பேருந்தின் மீது ஹெல்மெட்டை வீசினா். இதில் பேருந்தின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. இதைத்தொடா்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்து மீது ஹெல்மெட் வீசியவா்கள் பைக்கை நிறுத்தாமல் வேகமாக சென்று விட்டனா்.
இது குறித்து ஓட்டுநா் மதியழகன் ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். பயணிகள் மாற்றுப்பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.