கருங்கல் பகுதியில் சாரல் மழை
By DIN | Published On : 06th December 2019 07:53 AM | Last Updated : 06th December 2019 07:53 AM | அ+அ அ- |

கருங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை சாரல் மழை பெய்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான ரீத்தாபுரம், பாலப்பள்ளம், மிடாலக்காடு, ஆலஞ்சி, காக்கவிளை, கப்பியறை, செல்லங்கோணம், பாலூா், முள்ளங்கனாவிளை, மத்திகோடு, நட்டாலம், கொல்ஞ்சி, கிள்ளியூா், வெங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை முதல் தொடா்ந்து விடிய விடிய மழை பெய்தது. இந்த மழை வியாழக்கிழமையும் நீடித்தது.