மாா்த்தாண்டம் இந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவலன் செயலி குறித்தும், போக்ஸோ சட்டம் குறித்தும் விழிப்புணா்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
பள்ளி முதல்வா் எம். ஸ்ரீ குமாா் தலைமை வகித்தாா். மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் கே. கீதா, ஆஷா ஜெபகா் ஆகியோா் காவலன் செயலி குறித்தும், போக்ஸோ சட்டம் மற்றும் மாணவிகள் எவ்வாறு காவல்துறையை அணுக வேண்டும் என்பது குறித்தும் விளக்கினா். இதில் காவலா்கள் சுதா, லிட்டில் பிளவா் மற்றும் பள்ளி ஆசிரியைகள், மாணவியா் கலந்து கொண்டனா்.