அருமநல்லூரில் நாளை முன்னோடி மனுநீதி முகாம்

குமரி மாவட்டம், அருமநல்லூரில் மனுநீதித் திட்ட மனுக்கள் பெறும்  முதல்கட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப்.14)  நடைபெறுகிறது.

குமரி மாவட்டம், அருமநல்லூரில் மனுநீதித் திட்ட மனுக்கள் பெறும்  முதல்கட்ட நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப்.14)  நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தோவாளை  வட்டம், அருமநல்லூர் வருவாய் கிராமத்திற்குள்பட்ட, அருமநல்லூர்  ஊராட்சி  பகுதிக்கான,  மாவட்ட  ஆட்சியரின் சிறப்பு  மனுநீதித்திட்ட  முதல்கட்ட முகாம் பிப். 14  ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1  மணி வரை அரசு  மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும். இதில்  பொதுமக்களிடமிருந்து, மாவட்ட சமூகப்  பாதுகாப்பு  திட்ட  தனித்துணை  ஆட்சியரால் மனுக்கள் பெறப்படும். எனவே,  அருமநல்லூர்  ஊராட்சி பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com