நாகர்கோவில் ராமன்புதூர் சந்திப்பு புனித லூர்து மாதா கெபி திருவிழாவில் சமபந்தி விருந்து நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி முதல் தினமும் ஜெபமாலை நடைபெற்றது. நற்பணி இயக்கம் சார்பில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நற்பணி மன்றத்தலைவர் டடி.ராபிரொசாரியோ தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். கார்மல்நகர் இணைப் பங்குதந்தை முன்னிலை வகித்தார்.
இதில் நகரத் தலைவர் அலெக்ஸ், நற்பணி இயக்கச் செயலர் ஜெயன், பொருளாளர் அசோக், ஆலோசகர் யூஜின், அந்தோணிமுத்து, ஜேசுரத்தினம், சுபாஷ்அப்போலி, நிதின்எட்மண்ட், ஜோஸ், மது, சேவியர், ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.