மார்த்தாண்டம் அருகே இளைஞரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
இனயம்புத்தன்துறை பகுதியைச் சேர்ந்தவர் லைட்டஸ் ரெஜிராயின் (26). இவர் ஞாயிற்றுக்கிழமை மார்த்தாண்டம் அருகே பம்மம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியாக வந்த வீயன்னூர் பகுதியைச் சேர்ந்த சுபின் (23), சுவாமியார்மடம் பகுதியைச் சேர்ந்த பெர்லின் ஜோஸ் (17) ஆகியோர் சேர்ந்து லைட்டஸ் ரெஜிராயினை தடுத்து நிறுத்தி ரூ. 2 ஆயிரம் கேட்டனராம். அவர் கொடுக்க மறுத்ததையடுத்து, இருவரும் அவரது மோட்டார் சைக்கிளில் வெட்டுகத்தியால் வெட்டி சேதப்படுத்தியதுடன், கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து, சுபின், பெர்லின்ஜோஸ் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.