மார்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க 12 சிவாலயங்களில் 2ஆவது சிவாலயமான இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.