நட்டாலம் தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா, வியாழக்கிழமை

கருங்கல் அருகே உள்ள நட்டாலம் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருத்தல திருவிழா, வியாழக்கிழமை (ஜன.10) தொடங்கியது. இத் திருவிழா தொடர்ந்து 5 நாள்கள் நடைபெறுகிறது.
விழாவின் முதல் நாளான வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு திருக்கொடியேற்றம், திருப்பலி நடைபெற்றது. இந்த திருப்பலிக்கு குழித்துறை மறை மாவட்ட குருகுல முதல்வர் ஜேசுரெத்தினம் தலைமை வகித்தார். திருத்துவபுரம் மறை மாவட்ட முதல்வர் புஷ்பராஜ் மறையுரையாற்றினார்.
விழாவின் 2 ஆம் நாள் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு  மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி  நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற திருப்பலிக்கு, முளகுமூடு வட்டார முதல்வர் அருள்பணி ஹிலாரி தலைமை வகித்தார்.
விழாவின் 3 ஆம் நாள் சனிக்கிழமை காலை 10 மற்றும் 12 மணிக்கு ஆங்கில திருப்பலி நடைபெறும். மாலை 6 மணிக்கு அருள்பணி மைக்கிள் விம்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும்.
நான்காம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு அருள்பணி பெனிட்டோ தலைமையில் திருப்பலி நடைபெறும். 
விழாவின் நிறைவு நாளான திங்கள்கிழமை காலை  8.30 மணிக்கு திருவிழா திருப்பலி, குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் தலைமையில் நடைபெறுகிறது. காலை 11.30 மற்றும் 1 மணிக்கு திருப்பலி நடைபெறும். மாலை 4 மணிக்கு தக்கலை மறை மாவட்ட ஆயர் இராஜேந்திரன் தலைமையில் திருப்பலி நடைபெறும். அதைத் தொடர்ந்து திருக்கொடியிறக்கும் அன்பு விருந்து  நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com