நாகராஜா கோயில் தேரோட்டம்: 21 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (ஜன.21)  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்துக்கு திங்கள்கிழமை (ஜன.21)  உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற அருள்கு நாகராஜா திருக்கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு  ஜன.21 ஆம் தேதி  கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு ஈடாக பிப்ரவரி மாதம்  2  ஆவது சனிக்கிழமை (பிப்.9) அன்று மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
ஜன.21 ஆம் தேதி குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com