தக்கலை அருகேயுள்ள கேரளபுரத்தில் ஸ்ரீ ராகவேந்தரா நற்பணி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில், ரூ. 5 லட்சத்தில் புதிய நூலகக் கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
கேரளபுரத்தில் நேரு இளையோர் மையத்துடன் இணைந்து ஸ்ரீ ராகவேந்திர நற்பணிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நற்பணி மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, பத்மநாபபுரம் தொகுதி எம்எல்ஏ மனோ தங்கராஜ், தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கி புதிய நூலக கட்டடம் ஏற்பாடு செய்தார். அதன் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, பொங்கல் திருவிழாவில் ஒரு பகுதியாக புதிய நூலகக் கட்டடத்தையும் எம்எல்ஏ திறந்து வைத்தார். மேலும், அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் மாணவர்- மாணவிகளுக்கு நலஉதவிகள், ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலைகள் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு நற்பணி இயக்கத் தலைவர் மகாலிங்கம் தலைமை வகித்தார். குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீ குமார், கோபாலகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் கலா கோபாலகிருஷ்ணன், எஸ்.ஏ. புகாரி, கலையூர்காதர், தக்கலை சந்திரன், தினேஷ்குமார், லெனின் மற்றும் இயக்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.