திருவட்டாறு- திருவரம்பு சாலை கொல்வேல் கிராமத்தில் புனித கார்மல் அன்னை ஆலயம் உள்ளது. இதன் அருகில் புதுப்பிக்கப்பட்ட குருசடி அர்ச்சிப்பு விழா குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் ஏசு ரெத்தினம் தலைமையில் நடைபெற்றது. பங்குத்தந்தை ஒய்சிலின் சேவியர் முன்னிலை வகித்தார்.
அப்போது, ஆண்டுக்கொரு ஏழைக்கு வீடுகட்டும் திட்டத்திற்காக ரூ.2 லட்சம் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டது. மேலும், பங்கு மக்கள் பயன்பெறவும், எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் "கொல்வேல் சுடர்' என்னும் மும்மாத இதழும், பங்கு இணையதளமும் தொடங்கப்பட்டன. நிகழாண்டிலிருந்து கிறிஸ்து பிறப்பு விழாவின்போது ஏழை ஒருவருக்கு ரூ. 5 லட்சம் மதிப்பில் வீடுகட்டிக் கொடுக்கப்படும். செந்தறையில் பங்கில் இந்தத் திட்டம் 2016இல் தொடங்கப்பட்டதாக அருள்பணியாளர்கள் தெரிவித்தனர்.