பள்ளியாடி அருகே ரயிலில் அடிபட்டு லாரி ஓட்டுநர் உயிரிழந்தார்.
குமரி மாவட்டம், பள்ளியாடி அருகேயுள்ள ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் கிடப்பதாக, நாகர்கோவில் ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், போலீஸ் தரப்பில் கூறுகையில், சடலமாக கிடந்தவர் பள்ளியாடி பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராதாகிருஷ்ணன் ( 29); தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என தெரிவித்தனர்.