வேங்கோடு வட்டார இளம் கிறிஸ்தவ சங்க (ஒய்.சி.எஸ்.) மாநாடு மாதாபுரத்தில் நடைபெற்றது.
வேங்கோடு வட்டத்தைச் சேர்ந்த 20 தேவாலயப் பங்குகளில் உள்ள இளம் கிறிஸ்தவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டை, மரிய மார்ட்டின் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். இளம் கிறிஸ்தவ சங்க இயக்குநர் ஜோஸ் ஸ்டாலின், வட்டார முதல்வர் பெஞ்சமின், இணை இயக்குநர் குழந்தை ஆகியோர் பேசினர்.
இதில் நடத்தப்பட்ட போட்டிகளில் முன்சிறை பங்கு முதல் பரிசு மற்றும் சாம்பியன் பட்டத்தை வென்றது. வளனூர் மற்றும் கரும்பிலா விளை பங்குகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பிடித்தன.