அய்யா வழி மக்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.

அய்யாவழி மக்கள் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நாகர்கோவிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, ஒருங்கிணைப்பாளர் தங்கமோகன் தலைமை வகித்தார். ரசல்ராஜ், வழக்குரைஞர் ரஜினி, சுந்தர்ராஜ், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், 10 ஆம் வகுப்பு பிளஸ் 1 பாடத் திட்டம், கல்லூரி பாடத்திட்டத்தில் அய்யா வைகுண்டசாமி குறித்து தவறுதலாக வந்திருக்கும்  பாடத்தை நீக்க வேண்டும்;  அனைத்து வகுப்புகளிலும் தமிழ் பாடத்தில் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானையில் உள்ள வாசகங்களை சேர்க்க  வேண்டும்; கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை (ஜூலை 3) பிற்பகல் 3 மணிக்கு  நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com