குலசேகரம் அருகே ஆபத்தான பாலம்: பொதுமக்கள் அச்சம்

குலசேகரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள கால்வாய் பாலத்தை சீரமைக்க  வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குலசேகரம் அருகே ஆபத்தான நிலையில் உள்ள கால்வாய் பாலத்தை சீரமைக்க  வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையின் கால்வாயான கோதையாறு இடது கரைக் கால்வாயில் குலசேகரம் அருகே அரியாம்பகோடு பகுதியில் இரும்புப்  பாலம் உள்ளது. இப்பாலம் போதிய வகையில் பராமரிக்கப்படதால் துருப்பிடித்து உடையும் நிலையில் உள்ளது. 
இந்த  பாலம் அமைந்துள்ள பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில்,  இப்பாலத்தைக் கடந்து செல்லும் பெண்கள், குழந்தைகள்,  பள்ளி மாணவ, மாணவியர்  அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர்.  எனவே இப்பாலத்தை அகற்றி விட்டு புதிய பாலம் கட்டித் தர பொதுப்பணித்துறையினர் முன் வரவேண்டுமென்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com