கூடைப்பந்து போட்டி: நாகர்கோவில் கார்மல் பள்ளி வெற்றி

குமரி மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி  அணி வெற்றி பெற்றது. 

குமரி மாவட்ட அளவில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட போட்டியில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளி  அணி வெற்றி பெற்றது. 
தெற்காசிய மீனவர் கூட்டமைப்பின் சார்பில் குமரி மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் குறும்பனையில் நடைபெற்றது. புனித இன்னாசியார் விளையாட்டு கழகத்தின் சார்பில் 3 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் குமரி மாவட்டம் முழுவதுமிருந்து 20  அணிகள் கலந்து கொண்டன.  
  இதில் நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடி அணி வெற்றி பெற்று,  ரூ.15 ஆயிரம் ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையை பெற்றனர். போட்டியில்,  வெற்றி பெற்ற மாணவர்களையும்,  வழிகாட்டி ஆசிரியர் ரமேஷையும்  பள்ளித் தாளாளர் சேவியர்ராஜ், தலைமை ஆசிரியர் வில்சன் ஆகியோர் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com