மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியரிடம் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவிகள் மூவருக்கு பாலியல் தொந்தரவு அ

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே பள்ளி மாணவிகள் மூவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக எழுந்த புகாரை அடுத்து போலீஸார் ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர்.
கொல்லங்கோடு அருகே பாத்திமாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக பிலாமூட்டுக்கடை பகுதியைச் சேர்ந்த டேவிட்ராஜ் (45) என்பவர் பணி செய்து வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் வகுப்பிலிருந்த 3 மாணவிகளிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தாதக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவிகள் மூவரும் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். விடுமுறை முடிந்து திங்கள்கிழமை மாணவிகளின் பெற்றோர் பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து மாற்று ஆசிரியர் மூலமாக மேற்கண்ட மூன்று மாணவிகளுக்கு பாடம் நடத்தப்பட்டதாம். 
இந்நிலையில் மாணவிகளின் பெற்றோர் மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து, குழந்தைகள் நல அதிகாரிகள் புதன்கிழமை, பள்ளிக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.இதில், ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்தது உண்மையென தெரிந்ததையடுத்து குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, புதன்கிழமை மாலையில் கொல்லங்கோடு போலீஸார் ஆசிரியர் டேவிட்ராஜிடம் விசாரணை நடத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com