தக்கலையில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

தக்கலை பகுதியில் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தக்கலை பகுதியில் கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தக்கலையில்,  தேசிய நெடுஞ்சாலை, இரணியல் சாலை பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களில், ஆணையர் மூர்த்தி தலைமையில் 18 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இக்கடைகளில் இருந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 6 கடைகளுக்கு ரூ.5,400 அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வின்போது சுகாதார அலுவலர் ராஜாராம், சுகாதார ஆய்வாளர் முத்துராமலிங்கம், மேற்பார்வையாளர் மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com