கஞ்சா கடத்தல்: இருவர் கைது
By DIN | Published On : 13th July 2019 08:03 AM | Last Updated : 13th July 2019 08:03 AM | அ+அ அ- |

தக்கலை அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்தியதாக இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 300 கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை வெள்ளிகிழமை பறிமுதல் செய்தனர்.
தக்கலை சார்பு ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போலீஸார் தக்கலை அருகே முளகுமூடு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது, 300 கிராம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஆட்டோர் ஓட்டுநர் கண்ணனூர் நுள்ளிகாட்டுவிளையைச் சேர்ந்த அஜித் (25) , ஆட்டோவில் வந்த காட்டாத்துறை நாரதன்விளையைச் சேர்ந்த ஷாஜி (20) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.