கன்னியாகுமரி பேரூராட்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் சனிக்கிழமை அதிமுகவில் சேர்ந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கன்னியாகுமரி பேரூர் செயலர் ரெயான்ஸ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் 10 க்கும் மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் முன்னிலையில் அதிமுகவில் சேர்ந்தனர்.
அப்போது, அகஸ்தீசுவரம் அதிமுக ஒன்றியச் செயலர் எஸ். அழகேசன், பேரூர் செயலர் பி.வின்ஸ்டன், குமரி எஸ்.ராஜா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.