குலசேகரம் இளைஞர் ஓமன் நாட்டில் கொலை?

ஓமன் நாட்டில் பணியாற்றிவந்த, குலசேகரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக கிடைத்தத்

ஓமன் நாட்டில் பணியாற்றிவந்த, குலசேகரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதாக கிடைத்தத் தகவலை அடுத்து, அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
குமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள மாத்தூர் குறக்குடி பகுதியைச் சேர்ந்தவர் பாபு (32).  ஏ.சி. மெக்கானிக். இவருக்கு தந்தை இல்லை. தாய் ரெங்கபாய். கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு பாபு, அதே பகுதியைச் சேர்ந்த அருள் என்பவரின் உதவியோடு, ஓமன் நாட்டுக்குச் சென்று அங்குள்ள சலாலா என்ற இடத்தில் பணியாற்றி வந்தார். இவர் வேலைக்குச் சென்றபிறகு, இதுவரை சொந்த ஊருக்கு வரவில்லையாம். ஊரில் உள்ள தனது தாய் செலவுக்கு அவ்வப்போது பணம் அனுப்பிவந்தார். இந்நிலையில், சலாலா பகுதியிலுள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தில் உடலில் பலத்த காயங்களுடன் பாபு தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அங்கிருந்து பாபுவின் வீட்டிற்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலால் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாபுவின் உறவினர் ஒருவர் கூறுகையில், பாபு எதற்காக  கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த விவரங்கள் தெரியவில்லை. ஊருக்கு வந்து வீடுகட்டுவதற்கு பாபு திட்டமிட்டிருந்தார் என்றார். 
பாபுவின் மரணம் குறித்து ஓமன் நாட்டு அரசு விசாரணை நடத்த, இந்திய அரசு நிர்பந்தம் அளிக்க வேண்டுமென்றும், பாபுவின் உடலை இந்தியா கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்றும் பாபுவின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com