நாகர்கோவிலில் குடிநீர் டேங்கர் லாரியும், இருசக்கர வாகனமும் செவ்வாய்க்கிழமை மோதிக்கொண்டதில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தார்.
நாகர்கோவிலை அடுத்த தேரூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (33). கட்டடத் தொழிலாளி. இவரது மனைவி மீனாசெல்வி (29). இந்தத் தம்பதியினர் செவ்வாய்க்கிழமை காலை தங்களது ஊரில் இருந்து இருசக்கர வாகனத்தில் நாகர்கோவில் வந்து கொண்டிருந்தனர். ஒழுகினசேரியை அடைந்தபோது, அவர்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி எதிர்பாராமல் மணிகண்டனின் வாகனத்தின் மீது மோதியது. இதில், தம்பதியினர் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயமுற்ற மணிகண்டன் அதே இடத்தில் உயிரிழந்தார். மீனாசெல்வி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து, நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.