நித்திரவிளை அருகே மீனவரைத் தாக்கியதாக இருவர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
நித்திரவிளை அருகேயுள்ள தூத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி ரவி. மீன்பிடி தொழிலாளி. இவரது மனைவு ஜோகி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன் ரவி தூத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த அவரது மனைவியின் உறவினர்கள் ஜேம்ஸ் (38), ஜோஸ் (36) ஆகிய இருவரும் ரவியை தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து நித்திரவிளை போலீஸார் வழக்குப் பதிந்து, ஜோகியின் உறவினர்கள் இருவரையும் தேடி வருகின்றனர்.