மாதவலாயத்தில் சமுதாய நலக்கூடம் திறப்பு

மாதவலாயத்தில் ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை  தமிழக அரசின் தில்லி சிறப்பு

மாதவலாயத்தில் ரூ. 18 லட்சத்தில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை  தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம் வெள்ளிக்கிழமை  திறந்து வைத்தார்.
மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பனின் கிராம தத்தெடுப்பு திட்ட நிதியிலிருந்து, மாதவலாயம், கண்ணன்புதூர் அருகில் பட்டர்குளம் காலனியில்  ரூ. 18 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்  கட்டப்பட்டது.
இதன் திறப்பு விழாவுக்கு  தலைமை வகித்த  தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்  சமுதாய நலக்கூடத்தினை திறந்து  வைத்து பேசுகையில், இப்பகுதி பொதுமக்கள் வைத்துள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.   மக்களின்  அனைத்து  அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்படும் என்றார். 
நிகழ்ச்சியில்,  மாவட்ட ஆவின்தலைவர் எஸ்.ஏ.அசோகன்,  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய உறுப்பினர் அ.ராஜன், ஆரல்வாய்மொழி  தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார்,  வெள்ளமடம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பி.ஷேக்செய்யது அலி ஆகியோர்  பேசினர்.   வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இங்கர்சால் வரவேற்றார்.   ஏ.விஜி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com