குமரி அறிவியல் பேரவை சார்பில் மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் பயிற்சி ஆலஞ்சோலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தார். ஆலஞ்சோலை டி.எம். கான்வென்ட் அருட்சகோதரி மரியட்டா முன்னிலை வகித்தார். மூடோடு சிக்மா ஆர்க்கிடெக்சர் கல்லூரித் தலைவர் ஜேம்ஸ் வில்சன் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார். கேப்டன் பென்னட்சிங், ஜாண் ரபிகுமார், மருத்துவர் சுஜின் ஹெர்பர்ட், எட்வின்சாம் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர். சதீஷ்குமார் யோகா மற்றும் தியானப் பயிற்சியளித்தார். தொடர்ந்து கல்வியாளர்கள் பாலகிருஷ்ணன், சுனில்குமார், பேராசிரியை தன்யா, ஜாண்சன் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு திறன் வளர் பயிற்சியளித்தனர்.