நாகர்கோவிலில் 28இல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28)  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

நாகர்கோவிலில் வெள்ளிக்கிழமை (ஜூன் 28)  தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து,   மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் ம. மரியசகாய ஆண்டனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
நாகர்கோவில்  கோணத்தில் உள்ள  மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை (ஜூன் 28) காலை 10 மணிக்கு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 
இம்முகாமில், குமரி மட்டுமன்றி பிற மாவட்ட தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்று தங்கள் நிறுவனங்களுக்குத் தேவையான நபர்களை தேர்வு செய்வர். இம்முகாமில் 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு,  டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் குறித்த நேரத்துக்கு வந்து கலந்து கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com