பெரியபுராண சிந்தனை அரங்கத் திருக்கூட்டத்தின் 5 ஆம் ஆண்டு தொடக்க விழா நாகர்கோவில் இருளப்பபுரத்தில் வியாழக்கிழமை (ஜூன் 27) நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சிக்கு, திருவாவடுதுறை சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு கோட்டாறு மைய பேராசிரியர் பா.முத்துசாமி தலைமை வகிக்கிறார். காலை 8 முதல் 10 மணி வரை பெரியபுராண சிந்தனை திருக்கூட்ட மாணவர்களால் திருமுறை விண்ணப்பம் நடைபெறும்.
ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த நம்பி ஆருரன் சிவ.வேலுச்சாமி சிறப்புரையாற்றுகிறார். ஈ.எஸ்.எம்.எஸ்.விஜயன் வரவேற்கிறார். சைவத் திருமுறை நேர்முகப் பயிற்சி வகுப்பு அமைப்பாளர்கள் கோட்டாறு பொ.சந்திரகாசன், வடசேரி என்.ரவீந்திரன், சித்தாந்தரத்தினம் பி.சுகுணாபாண்டியன், பி.ஜனார்த்தனன் உள்பட பலர் பங்கேற்கின்றனர்.