மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்விக் கொள்கை வரைவு அறிக்கை நகல் எரிப்பு போராட்டம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் பதில்சிங் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் அ.ப. கண்ணன் விளக்கிப் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் சச்சின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.